புது தில்லி: மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று கர்நாடக முதல்வரான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்ற பின்பு எடியூரப்பா செவ்வாயன்று முதன்முறையாக தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
அப்போது அவர் சில கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மோடியிடம் அளித்துள்ளார். அதில் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன'
மேக்கேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை என எந்தச் சட்டமோ, விதியோ இல்லை; கர்நாடக எல்லைக்குள் அவ்வாறு அணை கட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தடை விதிக்கவில்லை
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.