ஜாகுவார் வாங்கிக் கொடுக்காத பெற்றோர்: பாடம் புகட்ட பிஎம்டபிள்யு காரை ஆற்றில் தள்ளிய பிள்ளை

ஜாகுவார் கார் கேட்ட பையனுக்கு பிஎம்டபிள்யு கார் வாங்கிக் கொடுத்த பெற்றோரால் கோபம் அடைந்த பிள்ளை செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
file photo
file photo

ஜாகுவார் கார் கேட்ட பையனுக்கு பிஎம்டபிள்யு கார் வாங்கிக் கொடுத்த பெற்றோரால் கோபம் அடைந்த பிள்ளை செய்த காரியம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஹரியாணா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த பெற்றோர் தனது பிள்ளைக்கு பிஎம்டபிள்யு காரை பரிசாக அளித்தனர்.

ஆனால், தான் ஜாகுவார் காரை விரும்பிக் கேட்டும், பெற்றோர் பிஎம்டபிள்யு காரை வாங்கிக் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த பிள்ளையோ, ஓடும் ஆற்றில் புத்தம் புதிய பிஎம்டபிள்யு காரை தள்ளிவிட்டிருக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஆற்றங்கரையோரத்தில் பிஎம்டபிள்யு காரை நிறுத்திவிட்டு, அதனை ஒரு இளைஞர் ஆற்றுக்குள் தள்ளும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக உயரமாக வளர்ந்திருந்த புற்களுக்குள் அந்த கார் சிக்கிக் கொண்டது. பிறகு, உள்ளூர் மக்களின் உதவியோடு, சில இளைஞர்கள் அந்தக் காரை வெளியே ஏற்றினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com