ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் நடுக்கடலில் இருந்த கப்பலில் திடிரென பயங்கர தீ விபத்து நேரிட்டது. கப்பலில் இருந்த 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலில் குதித்து மாயமான ஒரு கப்பல் ஊழியரை மட்டும் காணவில்லை. அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
விசாகப்பட்டினம் அருகே கடலில் 29 பேருடன் சென்ற ஜாகுவார் கப்பலில் திடீரென பயங்கரமாக தீப்பிடித்தது. இதில், கப்பலில் இருந்த 29 பேரும், உயிரைக் காக்க கடலில் குதித்தனர். கடலில் தத்தளித்த கப்பல் பணியாளர்கள் 29ல் 28 பேரை கடலோர காவல்படை மீட்டது. தீப்பித்த கப்பலில் இருந்து கடலில் குதித்து காணாமல் போன ஒரு பணியாளரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
மீட்கப்பட்ட 28 பேரும், உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.