32 தொகுதிகளில் 17இல் வெற்றி பெற்று சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 24 ஆண்டுகளாக சிக்கிமில் ஆட்சியிலிருந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு 15 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.
இந்நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பொதுச் செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் பாஜக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். இது தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இச்சம்பவம் சிக்கிம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.