பாகிஸ்தான் சுதந்திர தினம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாறப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் சுதந்திர தினம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாறப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வழக்கமாக எல்லையில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே இனிப்பு பரிமாறப்படுவது வழக்கம். 

நேற்று முன்தினம் பக்ரீத் தினத்தின் போதும், இந்திய பாதுகாப்புப்படையினர் வழங்கிய இனிப்பை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்றும்  அட்டாரி - வாகா எல்லையில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரிடையே இனிப்புகள் எதுவும் பரிமாறப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நம் நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com