பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாறப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வழக்கமாக எல்லையில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே இனிப்பு பரிமாறப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் பக்ரீத் தினத்தின் போதும், இந்திய பாதுகாப்புப்படையினர் வழங்கிய இனிப்பை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்றும் அட்டாரி - வாகா எல்லையில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரிடையே இனிப்புகள் எதுவும் பரிமாறப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நம் நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.