கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 17 குழந்தைகள் காயம்

கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 17 குழந்தைகள் காயமடைந்தனர். 
கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 17 குழந்தைகள் காயம்

கர்நாடகாவில் பள்ளிப் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 17 குழந்தைகள் காயமடைந்தனர். 

கர்நாடகா மாநிலம், மங்களூருவின் அருகே நந்தூர் பகுதியில் 17 குழந்தைகளுடன் பள்ளிப் பேருந்து இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த மரம் ஒன்று திடீரென முறிந்து பள்ளிப் பேருந்து மீது விழுந்தது. 

இதில் 17 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

கர்நாடகாவில் அண்மையில் பெய்த கனமழைக்கு பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com