ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை மாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.


ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை மாலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம், லே அருகே உள்ள மலைப்பகுதியில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் தாக்கம், லே, கார்கில் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
மகாராஷ்டிரத்தில்:  மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. 
இது தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி சந்தோஷ் கதம் கூறுகையில், பால்கர் மாவட்டத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலஅதிர்வு ஏற்பட்டது. தஹானு, தல்சாரி பகுதிகளில் அதிகாலை 5.35 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவானது. இதனால், மக்களுக்கும் அவர்களுடைய உடைமைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com