அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கல்லூரியில் கணினிகளை சேதப்படுத்தியதற்காக இந்திய மாணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஷ்வானந்த் அகுதோடா (27) என்ற மாணவர், அல்பானியில் உள்ள செயின்ட் ரோஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கணினிகளை சேதப்படுத்தும் பென் டிரைவ்களை 66 கணினிகளில் இணைத்தார். இதனால், அந்த கணினிகள் அனைத்தும் சேதமடைந்தன. இந்தக் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 58,471 அமெரிக்க டாலர்களும் (சுமார் ரூ.41 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது.