ஐ.நா. நிதிக்கு இந்தியா ரூ.7 கோடி பங்களிப்பு

ஐ.நா.வின் சிறப்பு நிதிக்கு இந்தியா ரூ.7 கோடியை அளித்துள்ளது.


ஐ.நா.வின் சிறப்பு நிதிக்கு இந்தியா ரூ.7 கோடியை அளித்துள்ளது.
இது தொடர்பாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ஐ.நா.வின் அமைப்புகளை மேம்படுத்த இந்தியா ரூ.7 கோடியை அளித்துள்ளது. இது மிகவும் அவசியமான பங்களிப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.வின் சிறப்பு நிதியானது, ஐ.நா.வின் கீழ் இயங்கும் அமைப்புகளின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும். இதற்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம். சிறப்பு நிதிக்குப் பங்களிக்கும் நாடுகளின் பெயர்கள், ஐ.நா.வின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்நிலையில், இந்தியா தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com