கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை

கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை

சாமராஜன் நகர் எனுமிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். 

கர்நாடக மாநிலம் குண்ட்லிபுட்டா பகுதியில் உள்ள சாமராஜன் நகர் எனுமிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் துப்பாக்கியால் சுட்ட பிறகு தந்தை தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த தற்கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com