மகாராஷ்டிரகத்தில் அரசுப் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் மமோதிக் கொண்ட விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 15 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நந்தூர்பார் மாவட்டத்தின் ஷஹாதா நகரில் இருந்து அரசுப் பேருந்து பயணிகளுடன் ஒளரங்காபாதை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
துலே மாவட்டத்தில் உள்ள நிம்குல் கிராமத்துக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரே, பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் இரு குழந்தைகள், இரு பெண்கள் உள்பட 11 பேர் இறந்தனர். படுகாயமடைந்த இருவர் துலே நகர மருத்துவமனையில் இறந்தனர். காயமடைந்த மற்ற 11 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் இந்த விபத்தில் இறந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.