லிதுவேனிய பிரதமருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு

லிதுவேனியா நாட்டின் பிரதமர் சாலியஸ் ஸ்கெவர்னலிசை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில், அந்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில், அந்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.


லிதுவேனியா நாட்டின் பிரதமர் சாலியஸ் ஸ்கெவர்னலிசை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள லிதுவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று நாடுகளில் வெங்கய்ய நாயுடு ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். லிதுவேனியாவில் கடந்த சனிக்கிழமை முதல் பயணம் மேற்கொண்டு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இந்த நிலையில், அந்நாட்டுப் பிரதமர் சாலியஸ் ஸ்கெவர்னலிசை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா-லிதுவேனியா இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com