மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பாபுலால் கெளர் (89) மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாபுலால் கெளர், மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக, 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். அந்த மாநிலத்திலுள்ள கோவிந்தபுரா தொகுதியின் எம்எல்ஏவாக 10 முறை அவர் இருந்துள்ளார். நீண்ட காலமாக முதுமை சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக புதன்கிழமை காலை கெளர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.