உள்துறைச் செயலராக அஜய் குமார் பல்லா நியமனம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலராக அஜய் குமார் பல்லா நியமனம்


மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலராக அஜய் குமார் பல்லாவை நியமனம் செய்துள்ளது. அவர் வரும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் நீடிப்பார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1984-ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான அஜய் குமார் பல்லா, மத்திய எரிசக்தித் துறை செயலராகப் பணியாற்றினார். பின்னர், உள்துறை அமைச்சக சிறப்பு அதிகாரியாகக் கடந்த மாதம் 24-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
உள்துறைச் செயலராக இருந்த ராஜீவ் கெளபா, கேபினட் செயலராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது உள்துறைச் செயலர் பதவிக்கு அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com