கடந்த ஜூனில் 12.19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

கடந்த ஜூன் மாதம் 12.19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இஎஸ்ஐசி) மூலம் தெரியவந்துள்ளது.


கடந்த ஜூன் மாதம் 12.19 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (இஎஸ்ஐசி) மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2018-2019 காலகட்டத்தில், 1.49 கோடி புதிய தொழிலாளர்கள் இஎஸ்ஐசியில் பதிவு செய்துள்ளனர்.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ), ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றிலும் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஜூன் மாதம் மட்டும் 12.36 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் இந்த அமைப்பில் 8.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com