புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு நாளை மதியம் வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யாமல் தவிர்க்க அமலாக்கத் துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத் துறைக்கும், சிதம்பரம் தரப்பிலும் காரசாச வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை நாளை மதியம் வரை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடையை நீட்டித்து உத்தரவிட்டது.