ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரசாத் ஞாயிற்றுக்கிழமை காலை திருமலை ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 1.11 கோடி நன்கொடையாக வழங்கினார்.
ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் அதற்கான வரைவோலையை தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினார்.