புது தில்லி: காஷ்மீரில் ஊடங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மெள்ள தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடகங்களை அனுமதிக்க மறுப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.