என்னைத் துன்புறுத்தி பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள்: டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

என்னைத் துன்புறுத்தி பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள் என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி
என்னைத் துன்புறுத்தி பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள்: டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு


பெங்களூரு: என்னைத் துன்புறுத்தி பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள் என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகியுமான டி.கே. சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட அகமது படேலை தோற்கடிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டது பாஜக. காங்கிரஸின் அப்போதைய அமைச்சரும், தொழிலதிபருமான டி.கே.சிவகுமார் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 44 பேரை கர்நாடகாவுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்திருந்து பாஜகவின் திட்டத்தை முறியடித்தார்.

அப்போதில் இருந்தே டி.கே. சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் குமார் மீது பாஜக தலைமையின் கண் பதிந்தது. இதையடுத்து பழிவாங்கும் நோக்கில் பாஜக அரசு, சிவகுமார் மீது வருமான வரித்துறையை ஏவி விவட்டது. 

2017- ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் டி.கே.சிவக்குமாரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டபோது, கஃபே காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தாவுக்கு சொந்தமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. 

சமீபத்தில், கர்நாடகத்தில் பாஜக செயல்படுத்தி ‘ஆபரேஷன் கமலா’ திட்டத்துக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியவர் டி.கே. சிவகுமார். ஆனால், அதை முறியடித்து, ஜனநாயக விரோத முறையில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக.

இந்நிலையில், வரி ஏய்ப்பு, பண மோசடி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டி.கே.சிவகுமாரை தில்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி நேற்று இரவு சம்மன் அனுப்பியிருந்தனர். 

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து டி.கே. சிவகுமார் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இதுகுறித்து டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 2 ஆண்டுகளாகவே எனது 83 வயது தாயின் அனைத்து சொத்துகள் குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. நான் பினாமி சொத்துக்கள் வைத்திருப்பதாக திட்டமிட்டே பாஜக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. எங்களின் ஒட்டுமொத்த ரத்தத்தையும் உறிஞ்சி எடுத்து விட்டனர். நான் எந்த தவறும் செய்யாததால் எனக்கு எவ்வித பயமுமில்லை. நான் சட்ட விரோத நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை.

தங்களிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறிவரும் பாஜக தலைவர்கள், அந்த ஆதாரத்தை விசாரணை அமைப்புகளிடம் அளிக்க வேண்டியதுதானே? என்னைத் துன்புறுத்திப் பார்க்கவேண்டும் என்பதுதான் பாஜகவினரின் எண்ணம்.

அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றால் என் மூலம் அதனை அனுபவித்துவிட்டு போகட்டும். அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராக நான் தயாராக உள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com