நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாகாலாந்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு மாநில தின வாழ்த்துக்கள். இந்த மாநிலம் சிறந்த கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. நாகாலாந்து மக்கள் இரக்கமும், தைரியமும் கொண்டவர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'வரவிருக்கும் ஆண்டுகளில் நாகாலாந்து முன்னேற்றத்தின் மூலமாக புதிய உயரங்களை எட்டட்டும்' என்று கூறியுள்ளார்.
மியான்மரின் எல்லையில் உள்ள நாகாலாந்து, டிசம்பர் 1, 1963 அன்று இந்தியாவின் 16 வது மாநிலமாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.