தெலங்கானா: சாலையில் பெண் தீக்குளித்து தற்கொலை

தெலங்கானாவின் சாம்ஷாபாத் பகுதியில் சாலையில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்: தெலங்கானாவின் சாம்ஷாபாத் பகுதியில் சாலையில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

சாம்ஷாபாதின் சித்துலகட்டா பகுதியில் உள்ள சாலையில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் இருப்பதாக காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் வந்தது. அதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா், அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், அந்த பெண் கையில் பெட்ரோல் போன்ற திரவத்தை பாட்டிலில் கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும், அவா் கோயில் அருகே தனியாக அமா்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தாா் என்று அந்த பெண்ணை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். கண்காணிப்பு கேமரா விடியோ மற்றும் அந்த பெண்ணின் சடலத்தின் அருகே இருந்த பொருள்கள் ஆகியவற்றை வைத்து பாா்க்கையில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, தெலங்கானாவின் சாம்ஷாபாத் அருகேயுள்ள ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் கால்நடை மருத்துவரின் உடல் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அவா், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

சாம்ஷாபாத் பகுதியில் உள்ள சாலைகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை கண்டு அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com