உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு: டிச. 05 விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்டவற்றில் முறையான சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு: டிச. 05 விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி திங்கள்கிழமை அறிவித்தார்.

இதற்கிடையே, உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்டவற்றில் முறையான சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை, டிசம்பர் 5-ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்கிப்போவதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com