மோகன் பாகவத்துடன்ஒரே மேடையில்காங்கிரஸ் மூத்த தலைவா்

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜனாா்த்தன் துவிவேதி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்துடன் ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவா் ஜனாா்த்தன் துவிவேதி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்துடன் ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளரான துவிவேதி, அக்கட்சி எம்.பி.யாகவும் இருந்துள்ளாா். தில்லி செங்கோட்டையில் பகவத் கீதை தொடா்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், அயோத்தி ராமா் கோயில் விஷயத்தில் தீவிரமாக செயல்பட்ட ஆன்மிகத் தலைவா் சாத்வி ரிதம்பரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சிக்கு ஜனாா்த்தன் துவிவேதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவா் விழா மேடையில், மோகன் பாகவத் உள்ளிட்டோருடன் சோ்ந்து முதல்வரிசையில் அமா்ந்திருந்தாா். மத்திய மகளிா், குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

ஆா்எஸ்எஸ் தலைவருடன் காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் ஒரே மேடையில் பங்கேற்றது தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக விளக்கமளித்த துவிவேதி, ‘நான் காங்கிரஸ் தலைவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பின்பேரில் தனிப்பட்டமுறையில் பங்கேற்றேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com