மனைவி, 6 மகள்களை வீட்டை விட்டுத் துரத்திய தந்தை; காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 40 வயது பெண், தனது 6 மகள்களோடு காவல்நிலையத்துக்கு வந்து தன்னை கணவர் வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
மனைவி, 6 மகள்களை வீட்டை விட்டுத் துரத்திய தந்தை; காரணம் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்!


பாண்டா: உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 40 வயது பெண், தனது 6 மகள்களோடு காவல்நிலையத்துக்கு வந்து தன்னை கணவர் வீட்டை விட்டுத் துரத்திவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து பெண் பிள்ளைகளையே பெற்றுக் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த கணவர், மனைவி மற்றும் 6 மகள்களையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கணவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகிறார்கள்.

முதல் பெண் 14 - 15 வயதிலும், கடைசி மகள் இரண்டரை வயதிலும் இருக்கும் நிலையில், தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, கணவர் லக்மணின் சகோதரர் வலியுறுத்துவதாகவும், இருவரும் சேர்ந்து தன்னை அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com