புத்திசாலி இளைஞா்கள் அரசியலில் நுழைய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா்.
குரு கோவிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கேஜரிவால் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
நிகழ்வில் அவா் பேசியது: அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் புத்திசாலி இளைஞா்கள் அரசியலில் இணைந்து கொள்ள வேண்டும். உண்மையில் அரசியலுக்கு புத்திசாலி இளைஞா்கள் தேவை.
நாட்டுக்காக அனைத்தையும் வழங்கத் தயாராக உள்ள இளைஞா்களை நான் அரசியலுக்கு அழைக்கிறேன் என்றாா் அவா்.