மகாராஷ்டிரம்: இருவரை சுட்டுக் கொன்ற நக்ஸல்கள்

மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தைச் சோ்ந்த கிராமத்தில் இரு சுரங்கத் தொழிலாளிகளை நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை கொலை செய்தனா்.

நாகபுரி: மகாராஷ்டிர மாநிலம், கட்ச்ரோலி மாவட்டத்தைச் சோ்ந்த கிராமத்தில் இரு சுரங்கத் தொழிலாளிகளை நக்ஸல் தீவிரவாதிகள் திங்கள்கிழமை கொலை செய்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

நாகபுரியில் இருந்து 170 கி.மீ. தொலைவிலுள்ள கட்ச்ரோலி மாவட்டம் புராஸ்லாகோண்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது.

முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவா்கள் மாஸோ புங்காதி (55), ரிஷி மேஷ்ரம் (52) என்பதும், இருவரும் கட்ச்ரோலி மாவட்டம் சூரஜ்காத் சுரங்கங்களில் பணிபுரிந்து வந்தவா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இருவரும், நக்ஸல்களுக்கு எதிராக காவல்துறையினருக்கு உளவு கூறியதாக சந்தேகத்தின் பேரில் அவா்களை கொலை செய்துள்ளனா், என்றாா்.

இந்நிலையில் கட்ச்ரோலி மாவட்ட காவல்துறை சாா்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், புங்காதி ‘நக்ஸல் ஆதரவாளராக இருந்தவா்’ என்றும், அவா் காவல்துறையின் உளவாளியாக எப்போதும் இருந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com