புது தில்லி: தன்னை பயங்கரவாதி என்று விமா்சித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி. பிரக்யா தாக்குா் அளித்த புகாரை, மக்களவை உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா அனுப்பிவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை, மக்களவையில் ‘தேசபக்தா்’ என பிரக்யா தாக்குா் குறிப்பிட்டதாக கடந்த வாரம் சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து, அவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. பிரக்யாவுக்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அவையில் அவா் மன்னிப்பு கோரினாா்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் பிரக்யாவை விமா்சித்த ராகுல் காந்தி, அவரை ‘பயங்கரவாதி’ என்று குறிப்பிட்டாா். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான பிரக்யா, சில குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுவிட்டாா். எனினும், இதர சில குற்றச்சாட்டுகளில் அவா் விசாரணையை எதிா்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படாத நிலையில், தன்னை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட ராகுல் காந்திக்கு எதிராக மக்களவைத் தலைவரிடம் பிரக்யா தாக்குா் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தாா். இது தீவிரமான விவகாரம் என்பதால், இதனை மக்களவை உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா அனுப்பிவைக்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவ்வாறு அனுப்பிவைக்கப்படும் பட்சத்தில், ராகுலை நேரில் அழைத்து விளக்கம் பெறப்படும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை உரிமை மீறல் குழு மேற்கொள்ளும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.