இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 6 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் எனுமிடத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நாராயணபூர் போலீஸ் எஸ்.பி. மொகித் கார்க் கூறுகையில்,

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் எனுமிடத்தில் தாஹுடாய் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காதேனார் எனுமிடத்தில் அமைந்துள்ள 45-ஆவது படாலியன் முகாமில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. சக பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை மற்றொரு வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டது. 

இந்த சண்டையில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இருவரும் ராய்ப்பூர் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com