மாடியில் இருந்து விழுந்த குழந்தை: மனிதச் சங்கிலி அமைத்துக் காப்பாற்றிய இளைஞர்கள் (விடியோ)

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக எந்தக் காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளது. டாமன் மற்றும் டையுவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் விடியோ வைரலாகியுள்ளது.
மாடியில் இருந்து விழுந்த குழந்தை: மனிதச் சங்கிலி அமைத்துக் காப்பாற்றிய இளைஞர்கள் (விடியோ)

மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக எந்தக் காயமும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளது. டாமன் மற்றும் டையுவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் விடியோ வைரலாகியுள்ளது.

டாமன் மற்றும் டையுவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை, தவறி கீழே விழுந்தது. இதைக் கீழே இருந்த இளைஞர்கள் பார்த்ததும், உடனடியாக மனிதச் சங்கிலி அமைத்து குழந்தையைக் காப்பாற்றினர்.

கீழே விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தான். குழந்தை ஜன்னல் கம்பியை பிடித்துத் தொங்குவதைப் பார்த்த இளைஞர்கள், உடனடியாக அங்கே ஒருவர் கையை ஒருவர் பிடித்து மனிதச் சங்கிலியை அமைத்தனர். 

குழந்தை கீழே விழுந்த போது இளைஞர்கள் அக்குழந்தையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். இதனால், குழந்தை காயமின்றி காப்பாற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com