காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
காஷ்மீர், குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்க்தார் எனும் பனிப்பிரதேசத்தில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
முன்னதாக கடந்த 18ஆம் தேதி சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.