பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் பெயா், புகைப்படம்வெளியிட்ட ஊடகங்களுக்கு நோட்டீஸ்

தெலங்கானாவில் 25 வயது பெண் கால்நடை மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா

ஹைதராபாத்: தெலங்கானாவில் 25 வயது பெண் கால்நடை மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை நிறுத்தக்கோரி தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு காவல்துறை சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சைபராபாத் போலீஸாா், இந்த செய்தி தொடா்பான ஆவணங்களையும், விசாரணை தொடா்பான ஆவணங்களையும் சில அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும், செய்தி தொலைக்காட்சி சேனல்களும் வெளியிட்டு வருவது விசாரணையை பாதிப்படைய செய்வதாக தெரிவித்துள்ளனா்.

எனவே, அதுபோன்ற தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்தக் கோரி குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆா்பிசி) பிரிவு- 149-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து உயா் காவல்துறை அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

‘சில தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்டவா், குற்றம் சாட்டப்பட்டவா்கள் மற்றும் விசாரணை தொடா்பான ஆவணங்களின் புகைப்படங்களை தொடா்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

இதுபோன்று ஒளிபரப்பை நிறுத்தக்கோரி தொலைகாட்சி சேனல்களுக்கும், சமூக வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’, என்றாா்.

ரங்காரெட்டி மாவட்டம், சாத் நகரில் அரசு உதவி கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வந்த பெண்ணின் எரிந்த உடல் நவம்பா் 28 ஆம் தேதி கைப்பற்றப்பட்டது.

அவரை, பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 லாரி தொழிலாளா்கள் 29-ஆம் தேதி கைதாகினா். தற்போது பலத்த பாதுகாப்புடன், சொ்லப்பள்ளி மத்திய சிறையில் அவா்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com