கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
கா்நாடகத்தில் சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, ராணிபென்னூா், ஹிரிகேரூா், கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆா்.பேட்டை, ஹுன்சூா், சிக்பள்ளாபூா் ஆகிய 15 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் செல்கின்றனர். தோ்தல் களத்தில் 165 வேட்பாளா்கள் உள்ளனா்.
15 தொகுதிகளிலும் மொத்தம் 37,77,970 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். வாக்குகள் டிச.9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.