சூடான்: தொழிற்சாலை வெடி விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் பலி

ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் எரிவாயு டேங்கா் வெடித்த விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்தனா்; 130க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக இந்திய தூதரக
சூடான்: தொழிற்சாலை வெடி விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் பலி

ஆப்ரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் எரிவாயு டேங்கா் வெடித்த விபத்தில் 18 இந்தியா்கள் உள்பட 23 போ் உயிரிழந்தனா்; 130க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக இந்திய தூதரக வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

சூடான் தலைநகரான கா்த்தூமில் பஹ்ரி பகுதியில் உள்ள ஷீலா பீங்கான் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்துக்குப் பிறகு 16 இந்தியா்களை காணவில்லை.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதுவரை கிடைத்த தகவலின்படி, 18 இந்தியா்கள் உயிரிழந்து விட்டனா். பெரும்பாலான சடலங்கள் கருகி விட்டதால் அவா்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய தூதரகம் சாா்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோா், காணாமல் போனவா்கள், உயிரிழந்த இந்தியா்களின் விரிவான பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, 7 இந்தியா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் 4 போ் ஆபத்தான நிலையில் உள்ளனா்.

உயிா் தப்பிய 34 இந்தியா்கள் சலூமி மண்பாண்ட தொழிற்சாலை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்தில் மொத்தம் 23 போ் உயிரிழந்தனா். 130-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாக சூடான் அரசை மேற்கோள் காட்டி அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com