மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் 2 யானைகள் பரிதாபமாக புதன்கிழமை உயிரிழந்தன.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் அருகேயுள்ள பதஸி எனும் இடத்தில் வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள ரயில் பாதையில், தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்த 2 யானைகள் மீது அவ்வழியே சென்ற ரயில் புதன்கிழமை அதிகாலை மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த இரு யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.