தேர்வுக் குழுவுக்கு குடியுரிமை மசோதா: எதிர்க்கட்சிகளின் மாநிலங்களவைத் தீர்மானம் தோல்வி

சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு  அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மாநிலங்களவையில் தோல்வியடைந்தது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு  அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மாநிலங்களவையில் தோல்வியடைந்தது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து புதனன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசினார்.

பின்னர் இதுதொடர்பாக மாநிலங்களவையில் காரசாரமான விவாதமம் நடந்தது. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தன.    

இதையடுத்து குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது.

வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு எதிராக 124 உறுப்பினர்களும், ஆதரவாக 99 உறுப்பினர்களும்  வாக்களித்தனர்.

இதனால் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com