சர்வதேச அளவில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய சர்வதேச அளவிலான போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் இந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் இருந்து 20 கிலோ கோகைன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து 55 கிலோ கோகைன் மற்றும் 200 கிலோ மெதாமெபிடமைன் ஆகிய போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.1,300 கோடி ஆகும்.
இதுதொடர்பாக 5 இந்தியர்கள், 1 அமெரிக்கர், 2 நைஜீரியர் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 9 பேர் பலதரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.