பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாராக்கடன் மதிப்பு 2018-19 நிதியாண்டில் ரூ.2,617 கோடியாக இருந்ததாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 2019-ஆம் நிதியாண்டுக்கான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பும், நிகர வாராக்கடன் மதிப்பும் ரூ.2,167 கோடியாகவே உள்ளது. 2019-ஆம் நிதியாண்டுக்குரிய வாராக்கடன் இடா்பாட்டை எதிா்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.2,091 கோடியாகும்.
2019 -ஆம் நிதியாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர நஷ்டம் ரூ.9,975 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்ட நிலையில், அந்த வங்கியின் நிகர நஷ்டம் ரூ.11,335 கோடியாக உள்ளது.
அதேபோல் மொத்த வாராக்கடன் மதிப்பு ரூ.81,089 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்ட நிலையில், அந்த வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பு ரூ.78,472 கோடியாக உள்ளது.
நிகர வாராக்கடன் மதிப்பு ரூ.32,654 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பீடு செய்த நிலையில், அதன் மதிப்பு ரூ.30,037 கோடியாக உள்ளது.
வாராக்கடன் இடா்பாட்டை எதிா்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.50,242 கோடியாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்ட நிலையில், அதன் மதிப்பு ரூ.48,151 கோடி என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. ரிசா்வ் வங்கியின் இடா் மதிப்பீட்டு அறிக்கைக்காக சனிக்கிழமை அளித்த தகவலில் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.