38 வயதில் 17வது குழந்தையை பெற்றெடுத்த மகாராஷ்டிரப் பெண்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 38 வயதில் 17வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 
38 வயதில் 17வது குழந்தையை பெற்றெடுத்த மகாராஷ்டிரப் பெண்!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 20 முறை கர்ப்பம் தரித்த நிலையில், சமீபத்தில் 17வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.  

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்கான் பகுதியைச் சேர்ந்தவர் லங்காபாய்(38). இவர் ஏற்கனவே 16 குழந்தைகள் பெற்றெடுத்த நிலையில் 17வது முறையாக கர்ப்பம் தரித்தார். தொடர்ந்து, கரும்பு அறுவடை செய்வதற்காக கர்நாடகா சென்ற நிலையில், அங்கு தனது 17வது குழந்தையை பெற்றெடுத்தார். பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது. பெற்றெடுத்த 16 குழந்தைகளில் ஏற்கனவே 5 குழந்தைகள் இறந்துவிட்டது. தற்போது 11 குழந்தைகள் உள்ளனர். மேலும், இத்துடன் லங்கா பாய் 20 முறை கர்ப்பம் தரித்துள்ளார்.

பீட் சுகாதார அதிகாரி டாக்டர் ஆர்.பி. பவார் இதுகுறித்து கூறுகையில், 'சமீபத்தில் அந்த பெண் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். 16 குழந்தைகளை வீட்டில் பெற்றெடுத்த நிலையில், இந்த முறை உடல் பலவீனமாக இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதை செய்துகொள்ள வந்ததாக தெரிவித்துள்ளார். அதன்படியே மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை செய்து பிரசவத்திற்கு வருமாறு அனுப்பியுள்ளனர். பிரசவத்திற்காக எங்களது குழு கடந்த நவம்பர் 21 அன்று அவரது வீட்டிற்குச் சென்றது. ஆனால் அவர் கர்நாடகாவுக்குச் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இப்போதுவரை, அவர் இன்னும் மகாராஷ்டிரா திரும்பவில்லை' என்று தெரிவித்தார். 

குடும்பக்கட்டுப்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், பெண்மணி ஒருவர் 20 முறை கர்ப்பம் தரித்துள்ள செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com