பாக். ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. 

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நீலம், தாங்கதார் மற்றும் கன்சல்வான் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தக்க பதிலடி தரப்பட்டு வருகிறது. இதில், பாகிஸ்தான் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 2 கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

முன்னதாக, சுந்தர்பானி பகுதியில் பிஏடி எனும் பாதுகாப்புப் படையினரைக் கொண்டு கடந்த சில நாள்களுக்கு முன் தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com