வடகிழக்கு பருவமழையை அடுத்து, தற்போது குளிர் வாட்ட தொடங்கியுள்ளது. மார்கழி மாதம் தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில தினங்களாக அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. மலைப்பகுதிகளில் பனி மூட்டமும், பனிப்பொழிவும் காணப்படுகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில தினங்களுக்கு கடும் குளிர் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.