ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியமைவது உறுதி: முதல்வர் ரகுபர் தாஸ்

ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுபர் தாஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். 
ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியமைவது உறுதி: முதல்வர் ரகுபர் தாஸ்

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 

இதில் காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களிலும், பாஜக 27 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுபர் தாஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 

இதுவரை முன்னிலை நிலவரங்கள் மட்டுமே வந்துள்ளன. எனவே இதனை இறுதி முடிவாக ஏற்க முடியாது. இன்னும் பலகட்டமாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆகையால், வெற்றி நிலவரத்தை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. ராஞ்சியில் மாலை செய்தியாளர்களை மீண்டும் சந்திப்பேன். இந்தப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com