அடல் நிலத்தடி நீர் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அடல் நிலத்தடி நீர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
அடல் நிலத்தடி நீர் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி


புது தில்லி: மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அடல் நிலத்தடி நீர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று பெயரிடப்பட்டுள்ள அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com