தில்லியில் பல்வேறு பகுதிகளில் போராட்டம்; சீலம்பூரில் 144 தடை உத்தரவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தில்லியில் பல்வேறு பகுதிகளில் போராட்டம்; சீலம்பூரில் 144 தடை உத்தரவு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிர போராட்டமாக உருவெடுத்தது. 

இந்நிலையில், இன்று தில்லி ஜும்மா மசூதி, ஜாமியா பல்கலைக்கழகம், சீலம்பூர், ஜோர் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜும்மா மசூதிக்கு தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்கள் மசூதிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தில்லி சீலம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீஸாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com