மும்பையில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கத்கோபர் எனும் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலை ஒன்றில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் 15 பேர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலையில் சிக்கிய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதனை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மும்பை தீயணைப்புத்துறை துணை அதிகாரி விஜயகுமார் பனிக்கிரஹி தெரிவித்தார்.