துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களின் விருப்பங்களை சாகடிக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
துர்காபூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைமையிலான மத்திய அரசு, நடுத்தர மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எல்லோருக்கும், எல்லா வளர்ச்சியும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.