அரசியலில் புதிய அத்தியாயம் படைக்க வாருங்கள்: கட்சியினருக்கு புதிய செயலர் பிரியங்கா அழைப்பு

காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் செயலராக சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வதேரா சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.
அரசியலில் புதிய அத்தியாயம் படைக்க வாருங்கள்: கட்சியினருக்கு புதிய செயலர் பிரியங்கா அழைப்பு

காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியின் செயலராக சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வதேரா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு நடைபெறும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நான் நாளை லக்னௌ வருகிறேன். நாம் அனைவரும் இணைந்து புதிய அரசியலை ஏற்படுத்துவோம், அதில் நீங்கள் அனைவரும் கட்டாயம் இடம்பெற வேண்டும். இளைஞர்கள், மகளீர் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் குரலும் இனி கேட்கப்படும். நாம் புதிய அரசியல் அத்தியாயம் படைப்போம், வாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு பிரியங்கா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவித்தார். கள்ளச்சாராயம் முற்றிலும் தவறானது, அது அழித்தொழிக்கப்பட வேண்டியது. இதனால் 2 மாநிலங்களில் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com