கும்பமேளாவை அரசியல் நோக்கங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது: அகிலேஷ் தடை குறித்து மாயாவதி காட்டம்

அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சமாஜவாதி கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
கும்பமேளாவை அரசியல் நோக்கங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது: அகிலேஷ் தடை குறித்து மாயாவதி காட்டம்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டார். பாஜக தன்னை கண்டு அஞ்சுவதாலேயே இதுபோன்று செய்திருப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சமாஜவாதி கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர் அமைப்புகளிடையே மோதல் ஏற்பட்டு சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தால் தான் அகிலேஷ் யாதவ் வரவேண்டாம் என அலகாபாத் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது. எனவே தான் அதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

பிரயாக்ராஜில் நுழைய அகிலேஷ் யாதவுக்கு தடை விதித்தது கண்டனத்துக்குரியது. சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி பாஜக-வுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தான் அவர்கள் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்று தடை விதிக்கின்றனர். கும்பமேளாவை தங்களின் அரசியல் நோக்கங்களுக்காக பாஜக பயன்படுத்துகிறது. அகிலேஷ் பிரயாக்ராஜில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, அதை நிரூபிக்கிறது என்று உ.பி. முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com