புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித விமானங்களை கையில் வைத்துக் கொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கேலி செய்யும் வகையிலும், சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்தும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.