புதுதில்லி: மத்திய அமைச்சர் அலுவாலியா மூச்சு திணறல் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். அலுவாலியாவுக்கு மூச்சு விடுவதில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இப்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.