புது தில்லி: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் மற்றும் தேர்தல் ஆணையர் இருவர் என மொத்தம் மூன்று பேர் பதவியில் இருப்பார்கள். இதில் ஒரு பதவி மட்டும் தற்போது காலியாக இருந்தது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சுஷில் சந்திரா மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத் தலைவராக இருந்து வந்தார்.
அவரது நியமனத்தை மத்திய சட்ட அமைச்சகம் உறுதி செய்துள்ளது.